உசிலம்பட்டியில் தா.பாண்டியன் உடல் அஞ்சலிக்கு வைப்பு

மதுரை: மறைந்த மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன் உடல் உசிலம்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்கு பின் வாகனம் மூலம் நேற்றிரவு உசிலம்பட்டி கொண்டு செல்லப்பட்டது. உசிலம்பட்டி அருகே வெள்ளைமலைப்பட்டியில் தா.பாண்டியன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தா.பாண்டியன் உடல் இன்று பிற்பகல் 2 மணிக்கு மேல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. பண்ணை இல்லத்தில் அவரது பெற்றோரை அடக்கம் செய்த இடத்தருகே தா.பாண்டியன் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. சிறுநீரக பிரச்சனையால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தா.பாண்டியன் நேற்று காலமானார்.

Related Stories: