மதுராந்தகம்: சாலையோர மரத்தில் கார் மோதிய விபத்தில், தொழிலதிபர் உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். சென்னை, அண்ணா நகரை சேர்ந்தவர் வின்சென்ட்பாபு (60). தொழிலதிபர். கடந்த சில நாட்களுக்கு முன் வின்சென்ட்பாபு, தனது உறவினர் சண்முகசுந்தரம் (59), நண்பர்கள் 2 பேருடன் கோயம்புத்தூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர், அங்கிருந்து 4 பேரும் நேற்று முன்தினம் இரவு காரில் சென்னைக்கு புறப்பட்டனர். நேற்று அதிகாலையில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, மதுராந்தகம் அடுத்த படாளம் அருகே வடபாதி பகுதியில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது, பனி மூட்டம் காரணமாக, கார் நிலைதடுமாறி சாலையோர மரத்தின் மீது பயங்கரமாக மோதியது.