ஊத்துக்கோட்டை: தாமரைப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார். இவரது மனைவி மீனா(36). இவர்களது மகனுக்கு புற்றுநோய் காரணமாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்து அங்கேயே இருவரும் தங்கி சிகிச்சையளித்து வந்தனர். மேலும், மீனாவின் வீட்டில் தனியாக இருந்த அவரது மகள் மற்றும் வயதான தாய், தந்தை ஆகியோரை பார்த்துக்கொள்ள மீனாவின் உறவினர் ஆரம்பாக்கத்தை சேர்ந்த கார்த்திக்(36) என்பவரை வரவழைத்தனர். இந்நிலையில், மீனா மகனின் மருத்துவ செலவிற்காக வீட்டில் இருந்த 22.1/2 சவரன் தங்க நகைகளை அடகு வைப்பதற்காக பீரோவை திறந்து பார்த்தார். அப்போது, நகைகளை காணவில்லை. இதுகுறித்து கார்த்திக்கிடம் கேட்டபோது மழுப்பலாக பதில் கூறினார்.