அறிவிப்பு வந்தால் தான் விசுவாசமாக உழைப்போம்

மாங்கனி மாவட்டத்தில் மாங்கனி கட்சியோட பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் போட்ட தீர்மானம், இலைகட்சி கூட்டணியில் புதிய குழப்பத்தை உண்டாக்கி இருக்காம். இது குறித்து நிர்வாகிங்க சொல்றப்போ ‘டாக்டரு காட்டுற வழியில் இந்த எலக்‌ஷன்ல நாம ஒர்க் பண்ணனும். இதுவரை நாம எந்த கட்சியுடன் கூட்டணி என்று டாக்டரு சொல்லலை. அதனால, அதைப்பத்தி நமக்கு எந்த யோசனையும்  தேவையில்லை. வழக்கம் போல நம்ம வேலையை பாத்துக்கிட்டே இருப்போம். அதே நேரத்தில் எந்த கட்சியுடன் கூட்டணி என்று அவர், அறிவிக்கிறாரோ அன்று முதல் அந்த கூட்டணிக்காக விசுவாசமாக உழைக்கணும்’ என்று தீர்மானம் போட்டிருக்கோம். அப்ப நீங்க இலைகட்சி கூட்டணியில் இல்லையா? என்று கேட்டால், இதுவரை அந்த கூட்டணியில் தான் இருக்கிறோம். ஆனாலும் வரப்போகும் தேர்தலில் அந்த கட்சியுடன்தான் கூட்டணி என்று எங்கள் டாக்டர் இதுவரை அறிவிக்கலியே. அது குறித்த அறிவிப்பு எந்த நேரத்திலும் வரலாம். அதனால்தான் கூட்டணி அறிவித்த நாள் முதல் விசுவாசமாக வெற்றிக்கு உழைக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டிருக்கோம்’ என்று விளக்குகின்றனர். இந்த விளக்கம் போதுமா? என்று எக்ஸ்ட்ரா ஒரு ேகள்வியையும் வைக்குறாங்க மாம்பழ நிர்வாகிகள்.

Related Stories: