உங்ககூட ஒர்க் பண்ண ஒரு வாய்ப்பு குடுங்கோ

சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட அதிமுகவில் கடும்போட்டி ஏற்பட்டுள்ளது. அந்த ஆசை மாஜி எம்பி பன்னீர்செல்வத்திற்கு இல்லாமலா போய்விடும்? இதற்காக அவர் யாரிடமும் போய் காய் நகர்த்தவில்லையாம். அவரே முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் சென்று, ‘‘சட்டமன்றத்தில்  உங்களுடன் பணியாற்ற ஒரு வாய்ப்பு கொடுங்கள்,’’ என்று கேட்டிருக்காராம். இதனால் எப்படியும் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம் அவர். ‘‘அம்மா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமிக்கு நிர்வாகிகளிடையே ஆதரவு இல்லை. அந்த நேரத்தில் அவருக்கு பக்கபலமாக இருந்தவர் எம்.பி பன்னீர்செல்வம். டெல்லி செல்லும் போதெல்லாம் அவருக்கு துணையாக இருந்தவர். அவருக்கு நல்லபெயர் இருக்குது. அவரது விசுவாசம் எப்படியும் வெல்லும்’’ என்று அவரது ஆதரவாளர்கள் உறுதியாக நம்புகிறாங்களாம்.

Related Stories: