அஞ்சு வருஷமா வராத ஞானம் இப்போ எப்படி வந்தது?

ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள், மீண்டும் சீட் வாங்குவதில் எப்படி குறியா இருக்காங்களோ, அதே போல் பப்ளிக்கை கவர் பண்ணவும் பல்வேறு ஜிகினா வேலைகளை காட்டுறாங்களாம். இதில் சேலம் ஆத்தூர் தொகுதி எம்எல்ஏ, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்திருப்பது பப்ளிக் மத்தியில் செம கடுப்பை ஏற்படுத்தி இருக்காம். அதாவது நம்ம தொகுதியில் வியாபாரிகள் பிரச்னை என்று பலபிரச்னைகள் இருக்கு. இந்த பிரச்னைக்கு எப்படி தீர்வு காணவேண்டும்? எந்த துறையை அணுக வேண்டும்? என்ற குழப்பமும் இருக்கு. இதை தீர்க்க மக்கள் சந்திப்பு கூட்டம், நடத்துறேன். எல்லாரும் அவசியம் வாங்க. அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று நோட்டீஸ் அச்சடிச்சி அழைப்பு விட்டிருக்காராம். அஞ்சு வருஷமா இந்த தொழில்ல என்ன பிரச்னை இருக்குன்னு கண்டுக்காம ஆட்சி முடியற நேரத்துல அண்ணனுக்கு எப்படிங்க ஞானம் வந்தது? என்று கடுப்பு காட்டுறாங்களாம் பப்ளிக்.

Related Stories: