புழல்சிறை முன் பெண் தர்ணா

புழல்: நாமக்கல்  பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த கெட்டியப்பன் (எ) பாண்டியனை (41), கொள்ளை வழக்கில் போலீசார் கைது செய்து, கடந்த 2019ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி புழல் சிறையில் அடைத்தனர். இவர் மீது மேலும் பல வழக்குகள் உள்ளதால், தண்டனை காலம் முடிந்தும், விடுவிக்க சிறைத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.   இதை கண்டித்து, அவரது மனைவி ரூபா (38), தனது 3 குழந்தைகளுடன் நேற்று சிறை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அதிகாரிகள் அவரை சமரசம் செய்ததை தொடர்ந்து, அங்கிருந்து சென்றார்.

Related Stories: