தமிழகத்தில் புதிதாக 481 பேருக்கு கொரோனா: 5 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் நேற்று மட்டும் 52,746 சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 481 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தற்போது வரை லண்டனில் இருந்தவர்கள் மற்றும் தொடர்பில் இருந்த 56 பேருக்கு கொரோனா ெதாற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை சேர்த்து தமிழகத்தில் 8,50,577 பேருக்கு தொற்று உறுதியானது. நேற்று மட்டும் 483 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது வரை 8,34,043 பேர் குணமடைந்துள்ளனர். 4,046 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 5 பேர் இறந்தனர். இவர்களை சேர்த்து இறந்தவர்கள் எண்ணிக்கை 12,488 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: