புதுடெல்லி: இந்தியாவில் 10 வருடங்களுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. 2011ம் ஆண்டு இறுதியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது. இந்நிலையில், நடைபெற இருக்கும் 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பில், பிற்படுத்தப்பட்ட மக்களை ஜாதி வாரியாக கணக்கெடுக்க வேண்டும் எனக் கோரி தெலங்கானாவை சேர்ந்த சமூக ஆர்வலர் மல்லேஷ் யாதவ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், `கடந்த 1979-80ல் மண்டல் ஆணையம் எடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது, நாட்டில் 3,743 பிற்படுத்தப்பட்ட பிரிவினர் இருந்தனர். தேசிய பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையத்தின் ஆய்வுப்படி, கடந்த 2006ம் ஆண்டில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் ஜாதி எண்ணிக்கை 5,013 ஆக உயர்ந்துள்ளது.