புதுடெல்லி: ‘தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை ஒன்றாக இணைத்து மார்ச் 5ம் தேதி விசாரிக்கப்படும்.’ என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது வரை கல்வி, வேலை வாய்ப்பு என அனைத்திலும் 69 சதவீத இடஒதுக்கீட்டு முறையே பின்பற்றப்படுகிறது. இந்நிலையில், சென்னையை சேந்த தினேஷ் என்ற மாணவர், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘மருத்துவ கலந்தாய்வு, பொறியியல் படிப்பு உட்பட பல்வேறு துறைகளில் இதர பிரிவை சேர்ந்தவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. அதனால், தமிழகத்தில் இருக்கும் 69 சதவீத இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக குறைக்க வேண்டும்,’ என கோரியுள்ளார்.