தமிழகம், கேரளா, புதுச்சேரியில் ஒரே நாளில் ஏப். 6ம் தேதி தேர்தல்!: சுனில் அரோரா அறிவிப்பு

டெல்லி: தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தமிழகம், கேரளா, புதுச்சேரியில் ஒரே நாளில் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக தேர்தல் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.

Related Stories: