×

தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும்: வாக்கு எண்ணிக்கை மே2-ம் தேதி: தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவிப்பு.!!!

புதுடெல்லி: தமிழகத்தில் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா  அறிவித்துள்ளார். தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி, ஆகிய 5 மாநிலங்களில் உள்ள சட்டப்பேரவைகளின் ஆயுட் காலம் விரைவில் நிறைவடையவுள்ளது. குறிப்பாக, தமிழக சட்டப்பேரவையின் ஆயுட்காலம் வரும் மே மாதம் 24-ம் தேதியுடன் நிறைவு பெரும் நிலையில் அதற்குள் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் தீவிர  நடவடிக்கையில் ஈடுபட்டது.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தமிழகத்தில், மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக, ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என்று அறிவித்தார்.

* வேட்பு மனு தாக்கல் ஆரம்பம் தேதி: மார்ச் 12-ம் தேதி
* வேட்பு மனு தாக்கல் கடைசி தேதி: மார்ச் 19-ம் தேதி
* வேட்புமனு பரிசீலனை தேதி: மார்ச் 20-ம் தேதி
* வேட்புமனு திரும்பப்பெறும் தேதி: மார்ச் 22-ம் தேதி
* வாக்கு எண்ணிக்கை: மே-2-ம் தேதி

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என்றும் அறிவித்தார்.


Tags : TN Assembly Elections ,Chief Elections Commissioner ,Sunil Aurora , Tamil Nadu Assembly elections will be held in a single phase on April 6: Counting of votes will take place on May 2: Chief Election Commissioner Sunil Arora's announcement !!!
× RELATED தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல்...