சென்னை: அரசு கல்வி நிலையங்களில் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கும் மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5% தனி இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. அரசு கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்க மசோதா வழிவகை செய்கிறது. மேலும் சீர்மரபினருக்கு 7 சதவிகித தனி இடஒதுக்கீடு வழங்கவும் மசோதா வகை செய்கிறது.