×

அரசியல் களத்தில் மனதில் பட்டதை துணிச்சலாக பேசியும்,செயல்பட்டும் வந்தவர் தா.பாண்டியன்: ஓபிஎஸ், கமல், தினகரன் உள்ளிட்டோர் புகழாரம்!!

சென்னை : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

துணை முதல்வர் ஓபிஎஸ்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.தா.பாண்டியன் அவர்கள் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தாருக்கும், அவர் சார்ந்த கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அன்னாரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன்

பொதுவுடைமைத் தூணொன்று சாய்ந்தது. பற்பல விழுதுகள் பாய்ச்சிவிட்டு கம்யூனிஸ வேரொன்று வீழ்ந்திருக்கிறது. தோழர் தா.பாண்டியன் மறைவு தமிழர்கள் அனைவருக்குமே பொது இழப்பு.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்

பொதுவுடைமை இயக்கத்தின் தூண்களில் ஒருவராக விளங்கிய மாபெரும் போராளி மதிப்பிற்குரிய ஐயா தா.பாண்டியன் அவர்களின் மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு ஐயா தா. பாண்டியன் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் கூறிக்கொள்கிறேன்.

விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி.

தோழர் தா.பா அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.அவரது மறைவு ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்திற்கும் நேர்ந்த பேரிழப்பாகும். ஈழத் தமிழர்களின் நலன்களில் அக்கறையோடு பணியாற்றியவர். முற்போக்கு சிந்தாந்த தளத்தில் அவரது பங்களிப்பு மகத்தானது. அவருக்கு எமது #வீரவணக்கம்.

டிடிவி தினகரன்

முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான பெரியவர்  தா. பாண்டியன் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்தவருத்தமுற்றேன். அவர், சிறந்த இடதுசாரி சிந்தனைவாதியாகவும்,  மக்களைஈர்த்த பேச்சாளராகவும், கருத்தாழமிக்க எழுத்தாளராகவும் திகழ்ந்த பன்முகஆற்றலாளர். அரசியல் களத்தில் மனதில் பட்டதை துணிச்சலாக பேசியும்,செயல்பட்டும் வந்தவர். கட்சிகளைத் தாண்டி புரட்சித்தலைவி அம்மா அவர்கள்மீது  பெரும் மதிப்பு கொண்டிருந்தவர். தனிப்பட்ட முறையில் என்னோடுநட்புடனும் அன்புடனும் பழகியவர்.திரு. தா.பாண்டியன் அவர்களின் மறைவால் வாடும் அவரதுகுடும்பத்தினருக்கும், கம்யூனிஸ்ட் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துக் கொள்கிறேன்.

ராமதாஸ் இரங்கல்

இந்திய பொதுவுடமைக் கட்சியின் முன்னாள் மாநில செயலாளரும், தலைசிறந்த பேச்சாளருமான  தா. பாண்டியன் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அவரது மறைவு தமிழகத்தில் பொதுவுடைமை இயக்கத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும்.தா. பாண்டியன் அவர்களை இழந்து வாடும் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தோழர்கள், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கல்களையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Tags : D. Pandian ,OBS ,Kamal ,Dinakaran , தா.பாண்டியன்
× RELATED கமலுடன் மீண்டும் இணைந்த லோகேஷ் கனகராஜ்