திருப்பூர் : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று திருப்பூரில் வேலை நிறுத்தம் நடந்தது. 80 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படாமல் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டன. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவியர் மற்றும் பணிக்குச் செல்லும் தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகினர். அதே வேளையில், தனியார் பேருந்துகளில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.