சென்னை: புடம் போட்ட தங்கம் போல் வாழ்ந்த பொதுவுடைமைப் போராளி தா.பாண்டியன் என திமுக தலைவர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். தமிழகத்தின் மீதும் இந்தியாவின் பன்முகத்தன்மை மீதும் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவர் தா.பாண்டியன் எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். தா.பாண்டியன் இப்போது நம்மிடம் இல்லை என்பதை என் நெஞ்சம் ஏற்க மறுக்கிறது என்று மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.