பள்ளி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வுக்கு தடை: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: தமிழகத்தில் தொடக்க கல்வி ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வுக்கு தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நாளை கலந்தாய்வு நடைபெறவிருந்த நிலையில், அதற்கு தடை விதித்து மதுரை உயர்நீதிமன்றக்கிளை உத்தரவிட்டுள்ளது.

பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்தாமல் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்தக்கூடாது என புதுக்கோட்டையை சேர்ந்த சண்முகநாதன் வழக்கு தொடர்ந்தார். பிப்ரவரி 27, 28 ஆகிய 2 நாள்கள் கலந்தாய்வு நடைபெற உள்ளதால் பணியிட மாறுதல் பெறும் ஆசிரியர்களின் உரிமை பாதிக்கப்படுவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டது.

தொடக்க கல்வி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கலந்தாய்வு வழக்கு விசாரணையை மார்ச் 2ம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை ஐகோர்ட் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: