பாளையில் குற்றச்செயல் விழிப்புணர்வு முகாம்-துணை கமிஷனர் பங்கேற்பு

நெல்லை : பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் நீச்சல், தடகளம், டென்னிஸ், பேட்மிட்டன், ஹாக்கி, வாலிபால், ஜிம்னாஸ்டிக், குத்துச்சண்டை உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில்  ஆர்வமிக்க மாணவ, மாணவிகள் தினமும் காலை, மாலை வேளைகளில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் அங்குள்ள விளையாட்டு விடுதிகளிலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தங்கி விளையாட்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்களது நலன்கருதி குற்றச்செயல் குறித்த விழிப்புணர்வு முகாம், காவல் துறை சார்பில் நடந்தது. இதில் மாநகர துணை கமிஷனர் சீனிவாசன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

சாலை பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். நமது கண்முன் நிகழும் குற்ற செயல்கள் குறித்து போலீசாரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுரைகளை அவர் வழங்கினார்.முகாமில் தடகள பயிற்றுநர் சத்யா மற்றும் பாளை. அண்ணா விளையாட்டு அரங்கத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வரும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: