சென்னை: விஜயவாடாவில் இருந்து வந்த ரயிலில் உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரூபாய் 20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. பினாகினி எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூபாய் 20 லட்சத்தை எடுத்து வந்த நெல்லையை சேர்ந்த ஹைதர், யூசப் அலியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. நெல்லூரிலிருந்து, நெல்லையில் உள்ள பீடி கம்பெனி அலுவலகத்துக்கு பணத்தை கொண்டு வந்ததாக இருவரும் தகவல் தெரிவித்துள்ளனர்.