சென்னை: கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கடன் தள்ளுபடி மூலம் தமிழ்நாட்டில் ஒரு லட்சம் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பயன்பெறும் என்று முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.