திருச்சியில் குறைவான பேருந்துகளே இயக்கம்-பொதுமக்கள் அவதி
திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை மாநகரில் இயக்கப்படும் 440 பஸ்களில் 220 பேருந்துகளும், வெளியூர்களுக்கு இயக்கப்படும் 496 பஸ்களில் 230 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் அலுவலகம் மற்றும் தினக்கூலி வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பேருந்துகள் இயக்கப்படாததால் சிரமத்திற்குள்ளாகினர். நேற்று முகூர்த்த தினம் என்பதால் மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு போதிய பஸ்கள் இயக்கப்படாததால் காத்துக்கிடந்து அவதிக்குள்ளாகினர். இயக்கப்பட்ட பேருந்துகளில் முண்டியடித்து ஏறி பயணம் செய்தனர். தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன.