சேலம்: சேலம் மாவட்டம் சரபங்கா வடிநிலத்திலுள்ள 100 வறண்ட ஏரிகளில் நீர் நிரப்பும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். குறுகிய காலத்தில் மேட்டூர்-சரபங்கா திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது என கூறினார். மேட்டூர் அணை 120 அடியை எட்டியதும் உபரிநீர் டெல்டா பாசனத்திற்கு போக மீதம் கடலில் கலந்து வருகிறது என கூறினார்.