பெங்களூரு: இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தாழ்த்தப்பட்ட பிரிவு ஆணையத்தின் அறிக்கை பெற்று அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா தெரிவித்தார். பாகல்கோட்டையில் இது தொடர்பாக அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா செய்தியாளர்களிடம் கூறியதாவது:குருபர் சமுகத்துக்கு இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி காகினேலே சுவாமிஜிகள், ஈஸ்வரானந்தபுரி ஆகியோர் போராட்டத்தை ஆரம்பித்தனர். போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன் முன்னாள் முதல்வர் சித்தராமையா வீட்டுக்கு சென்று ஆலோசனை நடத்தினர். அப்ேபாது சித்தராமையா ஆதரவு கொடுப்பதாக தெரிவித்துள்ளதாக சுவாமிஜிகள் என்னிடம் தெரிவித்தனர். இதனால் போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால் ஆரம்பத்தில் ஆதரவு கொடுப்பதாக தெரிவித்த சித்தராமையா பின்னர் ஏன் ஆதரவு வழங்கவில்லை என்று புரியவில்லை. அதே போல் பாகல்கோட்டையில் நடைபெற்ற போராட்டத்துக்கு என்னை அழைக்கவில்லை இதற்கு பின்னனில் ஆர்.எஸ்.எஸ். இருப்பதாக தெரிவித்தார். இத்துடன் குருபர் சமுகத்துக்கு இடஒதுக்கீடு வழங்க நடத்திய பாதயாத்திரைக்கு ஆர்.எஸ்.எஸ். நிதி உதவி வழங்கியதாக தெரிவித்தார்.