பெங்களூரு: பெங்களூரு விதானசவுதாவில் மலைநாடு பகுதிகளை சேர்ந்த எம்.எல்.ஏக்கள், அதிகாரிகளுடன் அமைச்சர் அரவிந்தலிம்பாவளி ஆலோசனை கூட்டம் நடத்தினார். பின்னர் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறிய
தாவது: மலைநாடு பகுதி களின் வனத்துறை தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று கடந்த சட்டப்பேரவை கூட்ட தொடரின் போது உறுதியளித்தேன். அதன்படி கூட்டம் நடத்தப்பட்டது. இதில் மலைநாடு பகுதிகளை சேர்ந்த 20 எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர். மலைநாடு சில பகுதியில் சாலை வளர்ச்சிக்கு சில சட்ட சிக்கல் உள்ளது. சாலை அமைக்கும் நிலம் தேசிய வனத்துறையிக்கு சொந்தமானதாக இருந்தால் மத்திய அரசு அனுமதி பெற வேண்டும். மாநில அரசின் நிலமாக இருந்தால் அதிகாரிகளே இது குறித்து முடிவு எடுக்கலாம். வனப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அக்கு பத்திரம் வழங்கும் திட்டம் வருவாய் துறையுடன் இணைந்து செயல்படுத்தப்படும். வடகர்நாடக பகுதியில் இந்த பிரச்னை அதிகமாகவுள்ளது.