126 பேர் தலைமை காவலர்களாக பதவி உயர்வு

பெங்களூரு: கர்நாடக ஆயுதப்படை போலீசில் காவலர்களாக பணியாற்றிய 126 பேருக்கு தலைமை காவலர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. கர்நாடக ஆயுதப்படை போலீசில் கே.எஸ்.ஆர்.பியில் இதற்கு முன்பு 13 முதல் 20 ஆண்டுகள் பணியாற்றினால்தான் தலைமை காவலர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. ஆனால் தற்போது பாஜ அரசு 3 ஆண்டுகள் பணியாற்றினாலே போதும், காவலர்கள் அனைவரும் தலைமை காவலர்களாக பதவி உயர்த்தப்படுவார்கள் என்று அறிவித்தது. அதன்படி நேற்று முன்தினம் கர்நாடக ஆயுதப்படையில் பணியாற்றிய 72 பெண் காவலர்களுக்கு, தலைமை காவலர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று கர்நாடக ஆயுதப்படையில் பணியாற்றி வரும் ஆண் காவலர்கள் 126 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. நேற்று இது தொடர்பான ஆணையை கர்நாடக ஆயுதப்படை ஏ.டி.ஜி.பி அலோக் குமார் அனைவருக்கும் வழங்கினார். மேலும் காவலர் என்ற பேச்ஜிற்கு பதிலாக தலைமை காவலர்களுக்கான பேச்ஜை அணிவித்துள்ளனர்.  

Related Stories: