ஹூப்பளி: கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹூப்பள்ளி ரயில் நிலையம் உலகிலேயே மிக நீளமான ரயில் நிலையமாக உருவாக்கப்பட்டு வருகிறது. தண்டவாள பணிகள் நிறைவடைந்துள்ளதாக தென்மேற்கு ரயில்வே மேலாளர் தெரிவித்துள்ளார்.
தற்போது செயல்பாட்டில் இருக்கும் ரயில் நிலையங்களிலேயே மிகப்பெரிய ரயில் நிலையமாக உத்தரபிரதேசம் மாநிலத்தின் கோரக்பூர் ரயில் நிலையம் இருக்கின்றது. சுமார் 1366 மீட்டர் நீளம் கொண்டது. இந்நிலையில் தற்போது கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளியில் உள்ள, சித்தரூதா சுவாமிஜி ரயில் நிலையம் சுமார் 1505 மீட்டர் நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு ரயில்வேவின் பொதுமேலாளர் அஜய் குமார் சிங் ரயில் நிலையத்தை பார்வையிட்டார். தொடர்ந்து அதன் 3 நுழைவு வாயில்கள், கட்டிடங்கள் தண்டவாளங்கள், பிளாட்பாரம்களை மறுவடிவமைப்பு செய்ய திட்டமிட்டனர்.