தீ விபத்தில் தாய், தந்தையை தொடர்ந்து சிகிச்சை பலனின்றி மகள் பரிதாப சாவு

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே மனைவியை தீ வைத்து எரித்து கொன்றபோது, காயமடைந்த கணவனும் இறந்தார். இதில், படுகாயமடைந்த மகள் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாமாக இறந்தார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அச்சிறுப்பாக்கம் அடுத்த இரும்புலி மேட்டு காலனியை சேர்ந்தவர் பார்த்திபன் (42). இவரது, மனைவி ஜீவா (38). கூலி தொழிலாள்கள். இவர்களது மகள்  கிருபாவதி (18). ஜீவாவுக்கு, அப்பகுதியை சேர்ந்த ஒருவருடன் கள்ள தொடர்பு இருந்தது. இதை அறிந்த பார்த்திபன், அவரை கண்டித்துள்ளார். ஆனாலும், அவர்களது தொடர்பு இருந்து வந்தது.

இதையொட்டி, கடந்த 23ம் தேதி கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பார்த்திபன், மனைவியை தீ வைத்து எரித்தார். அப்போது, அருகில் இருந்த மகள் கிருபாவதி மீது தீப்பற்றி, தந்தையை அணைத்து கொண்டார். இதனால் 3 பேரும் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்தில் ஜீவா சம்பவ இடத்திலேயே இறந்தார். பார்த்திபன் மருத்துவமனையில் சிகிச்ைச பலனின்றி இறந்தார். இந்நிலையில், படுகாயமடைந்த கிருபாவதி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார். இதுகுறித்து அச்சிறுப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: