வாலாஜாபாத் வாலாஜாபாத் ஒன்றியம் மருதம் ஊராட்சியில், புதிய ரேஷன் கடை கட்டிடம் திறக்கப்பட்டது. வாலாஜாபாத் ஒன்றியம் மருதம் ஊராட்சியில் உள்ள ரேஷன் கடை பாழடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதனால் மழை காலங்களில், அங்கு வைக்கப்படும் அத்தியாவசிய உணவு பொருட்கள் தண்ணீரில் நனைந்து நாசமாயின. இதையொட்டி, அங்கு புதிய ரேஷன் கடை கட்ட வேண்டும் என தொகுதி திமுக எம்எல்ஏ க.சுந்தரிடம், பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.11 லட்சத்தில், புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டப்பட்டது.