சென்னை: நிலக்கரியை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது தொடர்பான 1,330 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர் ஊழல் தொடர்பாக கூட்டு புலன் விசாரணை நடத்த கோரிய வழக்கில் தமிழக அரசு ஒரு வாரத்தில் பதில் தருமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகம் மூலம் 20 லட்சம் டன் நிலக்கரியை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்த அறிவிப்பை கடந்த ஜனவரி 18ம் தேதி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இணையதளம் மூலம் வெளியிட்டது. இந்நிலையில், வெளி நாடுகளில் இருந்து ரூ.1,330 கோடி அளவுக்கு நிலக்கரி இறக்குமதி டெண்டரில் முறைகேடு நடந்துள்ளது.