சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 14,428 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி திட்டத்தின் 37-வது நாளான இன்று, தமிழகத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி 13,803 பேருக்கும், கோவாக்ஸின் தடுப்பூசி 625 பேருக்கும் போட்டுக்கொண்டனர். இதுவரை மொத்தமாக 4,29,169 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.