கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே வனப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர காட்டு தீயால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்காமல் வனத்துறை வேடிக்கை பார்த்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில் பகல் நேரத்தில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள மரங்கள், புதர்கள் வறண்ட கிடக்கின்றன. காட்டு தீ ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கொடைக்கானல் அருகே வடகவுஞ்சி வனப்பகுதி மற்றும் வனப்பகுதியை ஒட்டியுள்ள தனியாருக்கு சொந்தமான நிலப்பகுதியில் நேற்றிரவு காட்டு தீ ஏற்பட்டது.