அகமதாபாத்: அகமதாபாத்தில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்டில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. இதற்கிடையே, குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய 3-வது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார்.
கிராவ்லி, சிப்லி இருவரும் இங்கிலாந்து இன்னிங்சை தொடங்கினர். சிப்லி ரன் ஏதும் எடுக்காமல், இஷாந்த் வேகத்தில் ரோகித் வசம் பிடிபட... ரசிகர்களின் ஆரவாரத்தில் ஸ்டேடியம் குலுங்கியது. தனது 100வது டெஸ்டில் விக்கெட் வீழ்த்திய இஷாந்த் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தார். தொடர்ந்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 112 ரன்னுக்கு ஆல் அவுட்டானது ( 48.4 ஓவர்). இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கி விளையாடிய இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 99 ரன் எடுத்து 13 ரன்கள் மட்டுமே பின்தங்கியிருந்தது.