வெற்றி ஒன்றே நம்முடைய இலக்காக இருக்க வேண்டும்: திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் உரை

சென்னை: வெற்றி ஒன்றே நம்முடைய இலக்காக இருக்க வேண்டும் என்று திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் அறைகூவல் விடுத்துள்ளார். சென்னை கொளத்தூரில் நடைபெற்று வரும் திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். திட்டமிட்டு வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் அவதூறு பரப்பப்படுவதை பார்த்து வருகிறோம். உலக அளவில், இந்திய அளவில் எந்த கட்சியிலும் இல்லாத வகையில் திமுகவின் கட்டமைப்பு உள்ளது என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். சென்னை கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கால்பந்து மைதானத்தை திறந்து வைத்தார்.

Related Stories: