துண்டு சோப்புகளை என்ன பண்ணுறீங்க?

புது சோப்பை எடுத்துக் குளிக்கும்போது ஜாலியாகதான் இருக்கும். நாளாக நாளாக சோப்பு கரைந்து சோனியாய் போனபோது, அடுத்த புது சோப்பை  எப்போ எடுப்போமோவென்று இருக்கும். எவருமே 100% சோப்பு கரையும் வரை பயன்படுத்துவதில்லை. இதுமாதிரி துண்டு சோப்புகளை தூக்கிப்  போட்டுவிடுகிறார்கள்.ஒரு வீட்டில் நாலு பேர் என்றால், குறைந்தது வாரத்துக்கு நாலு சோப்புத் துண்டு விழுகிறது. இந்த சோப்புத் துண்டுகளை உபயோகமாக மாற்ற முடியும்.  இம்மாதிரி விழும் துண்டுகளை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் மொத்தமாக போட்டு வைத்துக் கொள்ளுங்கள். கணிசமான அளவுக்கு சேர்ந்த பின்னர்  இவற்றையெல்லாம் போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க வையுங்கள்.நீர் கொதிக்கும்போது சோப்பு கரைந்து, திக்கான ஒரு திரவம் கிடைக்கும். அதை பழைய ஹார்பிக் டப்பாவில் போட்டு சேமித்து வைத்துக்கொண்டால்  தரையைத் துடைக்க சூப்பர் க்ளீனர் ரெடி.

Related Stories: