மதுரை: கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் வனவிலங்குகளின் பாகங்கள், தந்தம், தோல், பற்கள் போன்றவற்றிற்கு QR அடையாள எண் கொடுத்து இணையத்தில் பதிவேற்றக்கோரி உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. தமிழக வனவிலங்கு தலைமை பாதுகாவலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.