டெல்லி: சமூக வலைத்தளங்கள் மூலம் அவதூறு மற்றும் வதந்திகளை பரப்பக் கூடாது என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். மேலும், அரசு அல்லது நீதிமன்றம் உத்தரவிட்டால் சர்ச்சைக்குரிய இணைய தள பதிவுகளையும் நீக்க வேண்டும். புகார் அளித்த 24 மணி நேரத்துக்குள் சர்ச்சைக்குரிய படங்களை சமூக வலைத்தளங்களை நீக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.