சென்னை: 9,10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் நாளை முதல் பள்ளிக்கு வர வேண்டாம் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. சட்டப்பேரவையில் 9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் செய்யப்பட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதனை தொடர்ந்து நாளை முதல் 9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறப்பது குறித்து கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்பட்டு கடந்த ஜனவரி 19ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதேபோல் பிப்ரவரி 8ம் தேதி முதல் 9 மற்றும் 11ம் வகுப்புகள் தொடங்கப்பட்டன.