சென்னை: உடல் நலிவுற்று சிகிச்சை பெற்று வரும் பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் அவர்கள் விரைந்து நலன் பெற்று மக்கள் தொண்டினைத் தொடர விழைகிறேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை அனுப்பியுள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தா.பாண்டியனின் சிகிச்சை பெற்று வருகிறார்.