புதுச்சேரி: புதுச்சேரியில் விரைவில் புதிய துணைநிலை ஆளுநர் நியமிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதிய துணைநிலை ஆளுநராக முன்னாள் டெல்லி காவல் ஆணையாளர் பீம் சேன் பாஸி நியமிக்கப்படலாம் என்று டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. குடியரசுத்தலைவரிடம் முதல்வர் நாராயணசாமி புகார் எதிரொலியாக புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பதவி வகித்த கிரண்பேடியை மத்திய அரசு கடந்த 16ம் தேதி திரும்பப்பெற்றது. இதையடுத்து தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தையும் கூடுதலாக கவனித்து வருகிறார்.