சென்னை: கிராம மக்கள் சாமி கும்பிட்டு முயல் வேட்டை நடத்துவதற்கு அனுமதி தேவை என சட்டப்பேரவையில் எம்எல்ஏ பெரியபுள்ளான் கோரிக்கை விடுத்தார். வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தில் முயல்களை வேட்டையாட விலக்களிக்க வேண்டும் என கூறினார். வனவிலங்குகளை கொல்வதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது என அமைச்சர் சீனிவாசம் பதில் தெரிவித்தார். வனப்பாதுகாப்பே தமிழக அரசின் கொள்கை என அமைச்சர் பதில் அளித்தார்.