அதிமுக கூட்டணியில் 6 சீட் கேட்போம்; புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் பேட்டி

அவனியாபுரம்: அதிமுக கூட்டணியில் 6 சீட்கள் கேட்போம் என புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்தார். புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் நேற்று மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சொல்வதைப் போல இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கொரோனா முழுமையாக கட்டுப்படுத்தபடவில்லை. ஆனால் தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் கொரோனா இரண்டாம் அலை ஆரம்பித்தாலும் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட மாநிலமாகவே இருக்கிறது. ஆயிரம் கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவ சீட் வழங்குவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நடைபெற இருக்கும் தேர்தலில் அதிமுக கூட்டணியில், எங்கள் கட்சியின் சார்பாக 6 சீட்டுகள் வரை கேட்க உள்ளோம். தொகுதி பங்கீடு முடிந்தவுடன் அதற்கான அறிவிப்புகள் வெளிவரும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: