சென்னை: தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு, சுயநிதி நிபுணத்துவ, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு, அகில இந்திய சுயநிதி தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் கூட்டமைப்பு, சி.பி.எஸ்.இ ஸ்கூல் மேனேஜ்மென்ட் அசோசியேஷன், தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் சங்கம் மற்றும் கல்வி நிறுவனங்கள் திட்டமில்லா பகுதிகளில் அமைந்துள்ள கல்வி நிறுவனங்களின் கட்டிடங்களை வரைமுறைபடுத்த அரசுக்கு நீண்டநாட்களாக கோரிக்கை விடுத்து வந்தன. இதை ஏற்று, 1.1.2011க்கு முன்பு திட்டமில்லா பகுதிகளில் கட்டப்பட்ட கல்வி நிறுவனங்களின் கட்டிடங்களை நகர்புற ஊரமைப்புத்துறையின் முறையான அனுமதி பெற்று வரைமுறைப்படுத்திக்கொள்ள உரிய அரசாணையை வெளியிடப்பட்டது.