கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அருகே ஓய்வு பெற்ற விஏஓ வீட்டை உடைத்து 110 சவரன் நகை, 50 ஆயிரம், 2 கிலோ வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவம், கூடுவாஞ்சேரி அருகே பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. கூடுவாஞ்சேரி அடுத்த கன்னிவாக்கம் கிராமம், திருவள்ளூர் தெருவை சேர்ந்தவர் செந்தாமரை (75). ஓய்வு பெற்ற விஏஓ. இவரது மனைவி பிரேமா (65). இவர்களுக்கு 2 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். தரை தளத்தில் செந்தாமரையும், மாடியில் அவரது மகன் சித்த மருத்துவர் நந்தகுமார் (39) ஆகியோர் குடும்பத்துடன் வசிக்கின்றனர். சென்னை, சிஐடி நகரில் உள்ள செந்தாமரையின் மகள் மகேஸ்வரி, கடந்த 11ம் தேதி புதிதாக வீடு கட்டி கிரக பிரவேசம் நடத்தினார். அதில் கலந்து கொள்வதற்காக, செந்தாமரை குடும்பத்தினர் அனைவரும் சென்றனர். நந்தகுமாரின் மனைவி ஆனந்தவல்லி சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன் சென்றார். அவரை அழைத்துவர நந்தகுமார் நேற்று முன்தினம் இரவு சென்றார்.