திருவள்ளூர்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய கவுன்சிலருமான கேஜிடி.கௌதமன் தலைமையில் 10, 12ம் வகுப்புகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு, 2 பெண்களுக்கு, தையல் இயந்திரம், 3 நபர்களுக்கு இஸ்திரி பெட்டி, 3 நபர்களுக்கு காது கேட்கும் கருவி, 3 பெண்களுக்கு காய்கறி விற்பனைசெய்ய தள்ளுவண்டி, 2 ஆயிரம் நபர்களுக்கு அன்னதானம், 2 ஆயிரம் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் விழா காட்டுப்பாக்கத்தில் நடைபெற்றது. விழாவில் ஊரகத் தொழில் துறை அமைச்சரும், மத்திய மாவட்ட செயலாளருமான பா.பென்ஜமின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.