திருவள்ளூர் அருகே குழந்தையுடன் மகள் மாயம்: தந்தை புகார்

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே குழந்தையுடன்,  மகள் மாயமானதாக அவரது தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார். அவர்களை யாராவது கடத்திச் சென்றனரா என விசாரித்து வருகின்றனர். திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் மகள் நிவேதாபிரியா(26). இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு  விஷ்ணுவரதன்(4) என்ற குழந்தை உள்ளது.   இந்நிலையில் அவரை விட்டுவிட்டு அவரது கணவர் சென்றுவிடவே, 4 ஆண்டுகளாக தந்தை வீட்டில் வசித்து வந்தார்.இந்த நிலையில் கடந்த 22ம் தேதி காலை 8 மணிக்கு பால் வாங்க கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. பல இடங்களிலும், உறவினர்கள் வீடுகளிலும் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. இதுகுறித்து முருகேசன் கொடுத்த புகாரின்பேரில் செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குபதிந்து, இவர்களை யாராவது கடத்திச் சென்றனரா, வேறு காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: