புதுடெல்லி: மகாராஷ்டிரா, கேரளா மற்றும் பஞ்சாப், சட்டீஸ்கர், மத்தியப்பிரதேசத்தில் இருந்து டெல்லிக்கு வருவோர் கொரோனா இல்லை என்ற சான்றிதழை காட்டுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த ஒரு ஆண்டாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்தது.பொதுமக்கள் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் நோய் தொற்றினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வந்தது. ஒரு சில மாநிலங்களில் கொரோனா நோய் தொற்று எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதைத்தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் மாநிலங்களில் இருந்து மக்கள் டெல்லிக்கு வருவதற்கு அரசு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.