வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே புதுப்பட்டியில் இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது. களத்தில் சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கி பரிசை தட்டிச் சென்றனர். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தில் இன்று காலை 8.30 மணியளவில் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது. முன்னதாக, சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமார் தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். இதைத் தொடர்ந்து வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகள் மாடுபிடி வீரர்களை பந்தாடியது.