சென்னை: சென்னை ஆவடி அருகே வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.2,000 லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார். முத்தாள்புதுப்பேட்டையைச் சேர்ந்த சதீஷ் என்பவரிடம் வி.ஏ.ஓ.துர்கா தேவி ரூ.2,000 லஞ்சம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் வாங்கும் போது பாலவோடு கிராம நிர்வாக அலுவலர் துர்கா தேவியை லஞ்சஒழிப்பு துறையினர் கைது செய்தனர்.