திருப்பூர் மாவட்டத்தில் வெறிநாய்கள் கடித்து குதறியதில் 33 ஆடுகள் உயிரிழப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோயில் அருகே பட்டியல் புகுந்து வெறிநாய்கள் கடித்து குதறியதில் 33 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. சக்திபாளையத்தில் தங்கவேலு என்பவரின் ஆட்டுப்பாட்டியில் தான் இந்த துயர நிகழ்வு அரங்கேறியுள்ளது. நேற்று இரவு அடுக்கை அடைத்துவிட்டு தங்கவேலு வீட்டிற்கு சென்றுவிட்டார். அதிகாலையில் பட்டியல் புகுந்து வெறிநாய்கள் கடித்து குதறியதில் 18 ஆடுகள் மற்றும் 15 குட்டிகள் பலியாகியுள்ளன. மேலும் 15 ஆடுகள் காயமடைந்துள்ளன.

இவற்றின் மதிப்பு ரூ. 4 லட்சம் ரூபாய் ஆகும் சக்திபாளையம் கிராமத்தில் வெறிநாய்கள் அட்டகாசம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளார்.  இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தல் அதனை அவர்கள்  கண்டுகொள்வதில்லை எனவும் அந்த கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளார். 28 ஆடுகள் உயிரிழந்ததற்கான இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: