திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோயில் அருகே பட்டியல் புகுந்து வெறிநாய்கள் கடித்து குதறியதில் 33 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. சக்திபாளையத்தில் தங்கவேலு என்பவரின் ஆட்டுப்பாட்டியில் தான் இந்த துயர நிகழ்வு அரங்கேறியுள்ளது. நேற்று இரவு அடுக்கை அடைத்துவிட்டு தங்கவேலு வீட்டிற்கு சென்றுவிட்டார். அதிகாலையில் பட்டியல் புகுந்து வெறிநாய்கள் கடித்து குதறியதில் 18 ஆடுகள் மற்றும் 15 குட்டிகள் பலியாகியுள்ளன. மேலும் 15 ஆடுகள் காயமடைந்துள்ளன.