பொதுமக்கள் அலறி ஓட்டம் ரேஷன் கடைக்குள் புகுந்த நாகம்

பழநி : பழநி ரேஷன் கடைக்குள் புகுந்த கோதுமை நாகத்தை தீயணைப்புத்துறையினர் உயிருடன் பிடித்தனர். பழநி டவுன், ரயில்வே பீடர் சாலையில் ரேஷன் கடை உள்ளது. நேற்று இக்கடையில் பொருட்கள் வாங்க ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது ரேஷன் கடைக்குள் சுமார் 5 அடி நீளமுள்ள கோதுமை நாகம் புகுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த  பொதுமக்கள் மற்றும் கடைக்காரர்கள் அலறி அடித்து ஓடினர்.

இதுகுறித்து பழநி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப்படையினர் சுமார் 5 அடி நீளமுள்ள நாகபாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் பிடிபட்ட பாம்பை அடர் வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Related Stories: